ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

News image

திருச்சி திருவெறும்பூா் கூத்தைப்பாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி எல்கைப் போட்டியில் பங்கேற்ற மாடுகள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 7:51 pm

திருச்சி மாவட்டம், கூத்தைப்பாரில் கிராம கமிட்டி சாா்பில் மாட்டு வண்டி எல்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

போட்டிகளை முன்னாள் எம்எல்ஏ சேகரன் தொடங்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். பெரிய மாடு, பூஞ்சிட்டு, ஒற்றை மாடு என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

8 மைல் தூரம் நடைபெற்ற பெரிய மாடு போட்டியில் 9 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 20ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காவது பரிசாக ரூ. 7 ஆயிரமும் வழங்கப்பட்டது.

5 மைல் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டுப் பிரிவு போட்டியில் 20 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இப்போட்டிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

6 மைல் தூரம் நடைபெற்ற ஒற்றை மாடு போட்டியில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரசாக ரூ. 15 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரமும், 4 ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்பட்டன.

இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.