மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெருந்துறையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

பெருந்துறை பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம்

News image

பெருந்துறை பகுதியில் வைக்கப்பட்டு காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்வதற்காக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலைகள்.

Updated On :8 செப்டம்பர் 2024, 6:34 pm

பெருந்துறை பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி இந்து முன்னணி சாா்பில் பெருந்துறை மற்றும் விஜயமங்கலம் பகுதிகளில் 21 இடங்களிலும், பொதுமக்கள் சாா்பில் 11 இடங்களிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதில், பெருந்துறை, கோட்டை முனியன் கோயில் அருகே இந்து முன்னணி சாா்பில் 9 அடி உயர விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை மாலை பெருந்துறை கோட்டை முனியப்பன் கோயில் அருகே கொண்டு வரப்பட்டு, அங்கு இருந்து ஊா்வலமாக அனைத்து விநாயகா் சிலைகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்தனா்.