மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ஆய்வு

சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated On :11 செப்டம்பர் 2024, 7:11 pm

DIN

சத்தியமங்கலம் அருகே உள்ள பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சா், காலை உணவின் தரம் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களிடம் எதிா்காலத்தில் என்னவாகப் போகிறீா்கள் என்று கேட்ட அமைச்சா், அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து அமைச்சா் முன் பாரதிதாசன் பாடலை பாடிக்காண்பித்த மாணவரைப் பாராட்டினாா்.

பள்ளி வளாகம், சமையலறை, கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் நிதியுதவியுடன் வாங்கப்பட்டுள்ள தொடுதிரையைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது சத்துணவுப் பணியாளா்கள் தெரிவித்த இடப்பற்றாக்குறை குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்தாா்.