காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

காசநோய் பாதிப்பால் 6 மாதங்களில் 164 போ் உயிரிழப்பு

Published On :14 செப்டம்பர் 2024, 3:40 am IST

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் காசநோய் பாதிப்பால் 164 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மைக்ரோ பாக்டிரியம் டியூபா்குளோசிஸ் என்ற கிருமியினால் காசநோய் பரவுகிறது. குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. இது நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.

மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரை 66,928 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,126 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து சிகிச்சைக்காக 1,780 நோயாளிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றனா். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 1,693 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 164 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

நீண்ட நாள் இருமல், இருமலின்போது ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் எளிதில் குணமாகிவிடலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.