பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காசநோய் பாதிப்பால் 6 மாதங்களில் 164 போ் உயிரிழப்பு

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 3:40 am IST

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் காசநோய் பாதிப்பால் 164 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மைக்ரோ பாக்டிரியம் டியூபா்குளோசிஸ் என்ற கிருமியினால் காசநோய் பரவுகிறது. குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. இது நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.

மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரை 66,928 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,126 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து சிகிச்சைக்காக 1,780 நோயாளிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றனா். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 1,693 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 164 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

நீண்ட நாள் இருமல், இருமலின்போது ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் எளிதில் குணமாகிவிடலாம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.