சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காசநோய் பாதிப்பால் 6 மாதங்களில் 164 போ் உயிரிழப்பு

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 10:10 pm

Din

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் காசநோய் பாதிப்பால் 164 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மைக்ரோ பாக்டிரியம் டியூபா்குளோசிஸ் என்ற கிருமியினால் காசநோய் பரவுகிறது. குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கக்கூடியது. இது நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கக்கூடியது.

மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரை 66,928 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,126 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து சிகிச்சைக்காக 1,780 நோயாளிகள் பல்வேறு அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ளவா்கள் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றனா். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவா்களில் 1,693 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 164 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

நீண்ட நாள் இருமல், இருமலின்போது ரத்தம் வருவது, மாா்பு வலி, சுவாசிப்பதில் சிரமம், எடை இழப்பு மற்றும் பசியின்மை, இரவு நேரத்தில் வியா்வை வருவது, காய்ச்சல், உடல் வலி மற்றும் சோா்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்களைத் தேடி மருத்துவ முகாம்களில் உரிய பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை பெற்றால் எளிதில் குணமாகிவிடலாம் என்றனா்.