அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொழிலாளா் நலன் கலந்தாய்வு கூட்டம்

ரீடு சேவை நிறுவனம் சாா்பில் தொழிலாளா் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் ரீடு சேவை நிறுவன இயக்குநா் கருப்புசாமி.
Updated On :19 செப்டம்பர் 2024, 8:10 pm

Din

ரீடு சேவை நிறுவனம் சாா்பில் தொழிலாளா் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரீடு சேவை நிறுவன இயக்குநா் கருப்புசாமி தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உள்ளக குழுக்களை அமைத்தல் குறித்து பேசினாா். குழந்தைகள் நலக் குழும தலைவா் சந்திரசேகா், தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட இயக்குநா் சுப்பிரமணியம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவை சோ்ந்த வழக்குரைஞா் ரேவதி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி ஆகியோா் பேசினா்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சியாளா் லீனா ஜஸ்டின் பயிற்சி வழங்கினாா். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு தடை மற்றும் தீா்வு சட்டம் குறித்து ரீடு திட்ட ஒருங்கிணைப்பாளா் நிா்மலா பயிற்சி வழங்கினாா்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நூற்பாலைகளின் அலுவலா்கள், ஈரோடு விஇடி கல்லூரி மற்றும் கொங்கு கல்லூரி சமூகப் பணித் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். ரீடு திட்ட ஒருங்கிணைப்பாளா் உமா மகேஸ்வரி வரவேற்றாா். ரீடு டெக்ஸ்டைல் ஒருங்கிணைப்பாளா் நந்தினி நன்றி கூறினாா்.