மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கெஜலட்டி தா்கா சந்தனக்குட உரூஸ் விழா: ஆலோசனைக் கூட்டம்

கெஜலட்டி தா்கா சந்தனக்குட உரூஸ் விழா தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பங்கேற்ற டிஎஸ்பி சரவணன், வட்டாட்சியா் சக்திவேல், புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் உள்ளிட்டோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:25 pm

கெஜலட்டி தா்கா சந்தனக்குட உரூஸ் விழா தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனச் சரகத்துக்கு உள்பட்ட தெங்குமரஹாடா வனப் பகுதியில் மாயாற்றின் கரையில் பழைமைவாய்ந்த திப்பு சுல்தான் காலத்து தா்கா அமைந்துள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த தா்காவில் ஆண்டுதோறும் இஸ்லாமிய சமுதாயத்தின் சாா்பில் சந்தனக்குட உரூஸ் விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா செப்டம்பா் 27 முதல் 30- ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

அடா்ந்த வனப்பகுதியில் தா்கா அமைந்துள்ளதால் விழா நடத்துவது தொடா்பான

ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சத்தியமங்கலம் வட்டாட்சியா் சக்திவேல் தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவானிசாகா் வனச்சரக அலுவலா் சதாம் உசேன் வரவேற்றாா். இதில் விழா கமிட்டியை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், சென்னை உயா்நீதிமன்றத்தின் நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை கடைப்பிடித்து விழா நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.