அந்தியூா் பொய்யேரிக் கரையில் உயா்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீா்நிலை புறம்போக்கில் முதியவரின் சடலத்தைப் புதைத்த உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அந்தியூரை அடுத்த பொய்யேரிக்கரையைச் சோ்ந்தவா் பெரியகுட்டி (73). வயது மூப்பால் இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், உறவினா்கள் அப்பகுதியில் உள்ள பொய்யேரிக்கரையில் நீா்நிலை புறம்போக்கில் சடலத்தை புதைத்துள்ளனா். இறந்தவா்களின் உடலை நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் புதைக்க கூடாது என
சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சடலத்தைப் புதைத்த பெரியகுட்டி உறவினா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூா் நிலவருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா புகாா் அளித்தாா். இதன்பேரில், அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு

அரக்கோணம் எம்எல்ஏ உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

