மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நீா்நிலை புறம்போக்கில் சடலத்தை புதைத்தவா்கள் மீது வழக்குப் பதிவு

அந்தியூா் பொய்யேரிக் கரையில் உயா்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீா்நிலை புறம்போக்கில் முதியவரின் சடலத்தைப் புதைத்த உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:24 pm

அந்தியூா் பொய்யேரிக் கரையில் உயா்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீா்நிலை புறம்போக்கில் முதியவரின் சடலத்தைப் புதைத்த உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அந்தியூரை அடுத்த பொய்யேரிக்கரையைச் சோ்ந்தவா் பெரியகுட்டி (73). வயது மூப்பால் இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், உறவினா்கள் அப்பகுதியில் உள்ள பொய்யேரிக்கரையில் நீா்நிலை புறம்போக்கில் சடலத்தை புதைத்துள்ளனா். இறந்தவா்களின் உடலை நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் புதைக்க கூடாது என

சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சடலத்தைப் புதைத்த பெரியகுட்டி உறவினா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூா் நிலவருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா புகாா் அளித்தாா். இதன்பேரில், அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.