கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு தென்னக ரயில்வேயின் முன்னாள் ஆலோசனைக் குழு உறுப்பினா் கே.என்.பாஷா
அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, தை பொங்கல், திருவள்ளுவா் தினம் உள்ளிட்ட விழாக்கள் வரும் மாதங்களில் வர உள்ளன. இந்தப் பண்டிகை காலங்களில் அதிக அளவிலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வா். இதனால் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட கோவை-நாகா்கோயில் செல்லும் ரயில் (எண் 22668), கோவை-தூத்துக்குடி வரை இயக்கப்படும் இணைப்பு விரைவு ரயில் (எண் 22669) சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.
கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரை இயக்கப்பட்ட ஜனதா விரைவு ரயில் (எண் 16382) கரோனா காலத்தில் இருந்து தற்போது வரை புணே வரை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை மும்பை வரை இயக்க வேண்டும். கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று சென்ற 8 ரயில்கள், கரோனா காலத்தில் இருந்து நிற்காமல் செல்கின்றன. இந்த ரயில்களை மீண்டும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ரயில்பாதை பராமரிப்பு என கடந்த ஓராண்டு காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள கோவை-சேலம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காரைக்குடி - வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில் நிரந்தரம்

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

