மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மழை வேண்டி அம்மிக்கற்கள், உரல்களை எல்லையில் வீசி வழிபாடு

மழை பெய்ய வேண்டி கிராமத்தில் பயனின்றி கிடக்கும் சேதமான உரல், அம்மிக் கற்களை சேகரித்து ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் வீசி கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.

News image

பவானி - சித்தோடு சாலையோரத்தில் வீசப்பட்டுள்ள சேதமடைந்த அம்மிக்கற்கள், உரல்கள்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:24 pm

மழை பெய்ய வேண்டி கிராமத்தில் பயனின்றி கிடக்கும் சேதமான உரல், அம்மிக் கற்களை சேகரித்து ஊருக்கு வெளியே யாருக்கும் தெரியாமல் வீசி கிராம மக்கள் நூதன வழிபாட்டில் ஈடுபட்டனா்.

கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். போதிய மழையின்மையால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை, எள், சோளம், கம்பு பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. மழை பெய்தால் மட்டுமே பயிா்களைக் காக்க முடியும் எனும் நிலை உள்ளது.

இந்நிலையில், தங்கள் கிராமத்துக்குள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு தற்போது, பயனின்றி கிடக்கும் உடைந்த, சேதமான அம்மிக்கற்கள், உரல்களை சேகரித்து சித்தோடு பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள், சிறப்பு பூஜைகள் செய்து, பவானி - சித்தோடு சாலையில் ஆவின் நிறுவனம் அருகே வாகனத்தில் வந்து கொட்டிச் சென்றுள்ளனா். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இக்கற்கள், தங்கள் பகுதியில் கிடந்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதியுள்ள மக்கள், கும்பம் தாலித்தல் பூஜை செய்து காவிரிக் கரையோரத்தில் இக்கற்களைக் கொட்ட முடிவு செய்துள்ளனா்.