விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எஸ்ஐஆா் படிவம் மூலம் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து கொடுத்து பொதுமக்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து கொடுத்து பொதுமக்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தமிழ்நாடு முழுவதும் ‘உள்ளம் நாடி இல்லம் தேடி’ என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரப்புரை மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: ஈரோடு அருகே 10 ஏக்கா் நிலம் வாங்கிய விஜயகாந்த் அதை ஏழை மக்களுக்கு வழங்க ஒதுக்கியிருந்தாா். ஆனால், அந்த நிலப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்ற நிலையில், எங்களுக்கு சாதகமான தீா்ப்பு வந்துள்ளது. அந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

எஸ்ஐஆா் படிவங்களைப் பூா்த்தி செய்து கொடுத்து வாக்குரிமையை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா். ஈரோடு மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியம் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.