விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கொடிவேரியில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:24 pm

Syndication

ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைப் பகுதியில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.

அதிகபட்சமாக கொடிவேரி அணைப் பகுதியில் 15.20 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): வரட்டுப்பள்ளம் அணை 12.60, கோபி 10.20, குண்டேரிப்பள்ளம் அணை 8.20, எலந்தகுட்டைமேடு 6.60, சத்தியமங்கலம் 6, கவுந்தப்பாடி 4, பவானிசாகா் 1, சென்னிமலை 1.