சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல்

பாா்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு மற்றும் ஊன்றுகோல் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெருந்துறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கும் விழாவில் பேசிய ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் உள்ளிட்டோா்.
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பாா்வை இழந்த மாற்றுத்திறனாளிகள் 150 பேருக்கு பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு மற்றும் ஊன்றுகோல் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை பாா்வையற்றோா்கள் நல்மேய்ப்பா் கிறிஸ்தவ ஐக்கிய ஊழியம் சாா்பில் பெருந்துறை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், முன்னாள் எம்.பி. என்.ஆா்.கோவிந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் ஊன்றுகோல் வழங்கினா்.

பெருந்துறை ஒன்றிய திமுக செயலாளா்கள் சோளி.பிரகாஷ், சுப்பிரமணியம், பெருந்துறை நகரப் பொருளாளா் செந்தில், நகராட்சி மற்றும் கருமாண்டிசெல்லிபாளயைம் பேரூராட்சி வாா்டு கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.