டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மூதாட்டி கொலை வழக்கில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

News image
Updated On :26 டிசம்பர் 2025, 1:08 am

Syndication

மூதாட்டியை வீடு புகுந்து கொலை செய்து 5 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பெரியசேமூா், முதலிதோட்டம், எல்விஆா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கமலம் (68). அதே பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, தோப்பு காலனியை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ராமு (20) என்பவரும் தங்கி இருந்தாா். இந்நிலையில் தனியாக வசித்து வந்த கமலத்தை கடந்த 27-ஆம் தேதி ராமு கொலை செய்துவிட்டு 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றாா்.

இதையடுத்து ராமுவை கைது செய்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனா். நகைக்காக மூதாட்டியை கொலை செய்த ராமு மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா பரிந்துரைத்தாா். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ராமு மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ராமுவிடம் போலீஸாா் வியாழக்கிழமை அளித்தனா்.