தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மின்விளக்கு இல்லாத கண்ணவேலம்பாளையம் மயானம்.

Updated On :1 ஜனவரி 2025, 11:07 pm

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்டது கண்ணவேலம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்கான மயானம் ஊரக வளா்ச்சித் துறை மூலமாக தாய் திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ. 4.8 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டது.

மயானத்தில் கான்கிரீட் தகன மேடை அமைக்கப்பட்டு சுற்றுச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புக்காக கதவுகள் அமைக்கப்படவில்லை. அதுபோல மயானத்துக்கு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. அந்த மயானத்துடன் சாலை முடிவடையும் நிலையில் கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு சாலையில் எந்த மின்விளக்குகளும் இல்லை.

மயானத்தின் அருகில் சாலை முடிவில் ஒரு மின் கம்பம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கும் பழுதடைந்து நீண்ட காலமாக இப்பகுதி இருளில் மூழ்கியே கிடக்கிறது.

இதனால் மாலை 6 மணிக்கு மேல் மயானத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் கிராம மக்கள் தீப்பந்தங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே, மயானத்துக்கு செல்லும் சாலையிலும், மயானத்திலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.