ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பவானிசாகா் அணைப் பூங்காவில் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா்.

News image

பவானிசாகா்  அணைப் பூங்காவில்  படகில்  சவாரி  செய்யும் சுற்றுலாப் ணிகள்.

Updated On :1 ஜனவரி 2025, 11:05 pm

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா்.

பவானிசாகா் அணையில் நீா்வளத் துறைக்கு சொந்தமான அணைப்பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்தப் பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவா் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி பூங்காவுக்கு புதன்கிழமை ஆங்கில பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனா். பூங்காவில் குடும்பத்துடன் திரண்ட பொதுமக்கள் படகில் சவாரி செய்தும் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.