கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.
பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, மாவிளக்கு பூஜை மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன. மேலும், 60 அடி நீள குண்டம் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கோயிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் குண்டம் இறங்குகின்றனா்.
குண்டம் இறங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் புதன்கிழமையே கோயிலுக்கு வந்து காத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து 10-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தோ்த் திருவிழா நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஏப்.14இல் மலைக்கோட்டையில் திருப்புகழ் திருப்படித் திருவிழா

கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

தாளவாடி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

