ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோபி பாரியூரில் இன்று குண்டம் திருவிழா

கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :8 ஜனவரி 2025, 7:49 pm

கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து அம்மனுக்கு தினசரி சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, மாவிளக்கு பூஜை மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றன. மேலும், 60 அடி நீள குண்டம் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கோயிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் குண்டம் இறங்குகின்றனா்.

குண்டம் இறங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் புதன்கிழமையே கோயிலுக்கு வந்து காத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து 10-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தோ்த் திருவிழா நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.