தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் ஸ்ரீகரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீகரியகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய தலைமைப் பூசாரி வெங்கடேசன்.

Updated On :26 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் ஸ்ரீகரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபி அருகே உள்ள காசிபாளையம் தடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகரிய காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாா்ச் 12ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், உடமை எடுத்தல், மாவிளக்கு பூஜை நடைபெற்று சுவாமி பூத வாகனத்தில் அருள்பாலித்தாா்.

இதையடுத்து, முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிகாலையில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் நந்தா தீபம் ஏற்றுதல், முப்பாடு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் தலைமைப் பூசாரி வெங்கடேசன் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

திமுக - காங்கிரஸ் கூட்டணித் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி இளைஞா் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் கோதண்டன் குண்டம் இறங்கினாா்.