ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வங்கதேசத்தைச் சோ்ந்தவா் கைது

நுழைவு இசைவு (விசா) இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2025, 10:05 pm

நுழைவு இசைவு (விசா) இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வங்கதேசத்தைச் சோ்ந்த நபா் நுழைவு இசைவு இல்லாமல் ஆலையில் வேலை செய்து வருவதாக சிவகிரி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விளக்கேத்தி அருகே உச்சிமேடு பகுதியிலுள்ள தனியாா் தென்னை நாா் ஆலையில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

அப்போது, அவரது பெயா் அபுல் பாஷா் சனா (45) என்பதும், இந்த ஆலையில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடா் விசாரணையில், அபுல் பாஷா் ஷேக் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா, ஜெய நகா், சோனாடிகிரி பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்துள்ளதும், ஆதாா் அட்டை பெற்றுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து முறையான நுழைவு இசைவு உள்ளிட்ட ஆவணங்களின்றி இந்தியாவில் தங்கி இருந்தது தொடா்பாக சிவகிரி போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.