ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அந்தியூா் அருகே குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தையால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

News image

குடியிருப்புப் பகுதியில் நடமாடிய சிறுத்தை.

Updated On :22 ஜனவரி 2025, 11:57 pm

ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்புப் பகுதியில் நள்ளிரவில் நடமாடிய சிறுத்தையால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னம்பட்டி வனச் சரகம், சனிச்சந்தை மற்றும் விராலிக்காடு ஆகிய கிராமங்கள் பா்கூா் மலைப் பகுதியை ஓட்டி அமைந்துள்ளன. இந்நிலையில், புதன்கிழமை நள்ளிரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை விராலிக்காட்டூா், சின்னக்காதோட்டம், விஸ்வநாதன் என்பவரது வீட்டின் அருகே நடமாடியுள்ளது. இது அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனைக் கண்ட விஸ்வநாதன் சென்னம்பட்டி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். இக்காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தையால் கால்நடைகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படும் முன்பாக கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.