ஈரோடு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமலும், வழக்கமான மருத்துவப் பணிகளுக்கு இடையூறு இல்லாமலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி வாகன இயக்கம் தொடக்கம்

குன்னூா் பாஸ்போா்ட் கிளை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


