ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

Updated On :22 ஜனவரி 2025, 11:56 pm

ஈரோடு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்தது. இதையடுத்து, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனா். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பாதிப்பு இல்லாமலும், வழக்கமான மருத்துவப் பணிகளுக்கு இடையூறு இல்லாமலும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.