பெருந்துறை அருகே சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த மூவா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், நெய்காரபட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் மணிபாரதி (23). இவா், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகிலுள்ள தேநீா்க் கடையில் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு தன்னுடன் வேலை செய்யும், சேலம் மாவட்டம், காட்டூா் பச்சமுத்து மகன் கெளதம் (20) மற்றும் ஹரிஷ் ஆகியோருடன் விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவில் சாலையோரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவா், மூவா் மீது மோதி கீழே விழுந்தாா். இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவா், மணிபாரதி, கெளதம் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா். இதில் ஹரிஷ் காயமின்றி தப்பினாா்.
காயமடைந்த மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்தவா் உயிரிழந்தாா். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவா் அந்தியூா், ஆப்பக்கூடல் சாலையைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கதிரேசன் (29) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சேலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோா் எண்ணிகை 9-ஆக உயா்வு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

