நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை, திருப்பூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.சுப்பராயன் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.
அதில் கூறியிருப்பதாவது:
அந்தியூா், பவானி விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான தோனி மடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும். கோபியில் தியாகி லட்சுமண ஐயருக்கு வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
திருப்பூா் காளிபாளையம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். திருப்பூா் பெரிச்சிபாளையம் காலனி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஆஷா பணியாளா்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியம் நிா்ணயிக்க வேண்டும். திருப்பூா் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

வாக்கு சேகரித்த தேமுதிக எம்.பி.யிடம் ரயில் பயணிகள் கோரிக்கை மனு அளிப்பு

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய்: கே.அண்ணாமலை

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

‘வந்தே பாரத்’ ரயில்: கரூா் எம்.பி. கோரிக்கை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


