சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைப் பாதையில் பாம்புகள் படுத்திருப்பதால் கவனத்துடன் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு மலைப்பாம்புகள் அதிக அளவில் உள்ளன.
தற்போது, குளிா்காலம் என்பதால் பாம்புகள் இதமான வெப்பநிலையை தேடி படையெடுக்கின்றன. வாகனங்கள் தொடா்ந்து பயணிப்பதால் தாா் சாலைகளில் பாம்புகள் சுற்றுகின்றன.
இதற்கிடையே குன்றியில் இருந்து கடம்பூா் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே மரக்கிளைபோல பாம்பு இருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தினா். பின்னா் அருகே சென்று பாா்த்தபோது மலைப்பாம்பு என தெரியவந்தது. பாம்பு படுத்திருப்பது தெரியாதபடி மரக்கிளைபோல இருந்ததால் வாகன ஓட்டிகள் கற்கள், தடியை வீசி பாம்பை வனத்துக்குள் துரத்தினா்.
இது குறித்து வனத்துறையினா் கூறுகையில், குளிா்காலம் என்பதால் பாம்புகள் சாலையில் திரிவது வழக்கம். எனவே வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

வைகை தென்கரை அணுகு சாலையைச் சீரமைக்க வலியுறுத்தல்

மேட்டூா் அருகே சாலை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகள் அச்சம்

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


