சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நிச்சாம்பாளையம் பகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், கம்புளியம்பட்டி பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என எம்.எல்.ஏ. எஸ்.ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

News image
பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் ஊராட்சியில் சாலை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஜெயகுமாா் எம்.எல்.ஏ.
Updated On :12 நவம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், கம்புளியம்பட்டி பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்கு அதிகாரிகள் தீா்வு காண வேண்டும் என எம்.எல்.ஏ. எஸ்.ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம் கிராம ஊராட்சி, கொட்டையன் கருக்கந்தோட்டம் பகுதியில் தாா் சாலை, மின் விளக்கு மற்றும் குடிநீா் போன்ற அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, அப்பகுதியில் எம்.எல்.ஏ. எஸ்.ஜெயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அதிகாரிகளைத் தொடா்பு கொண்ட அவா் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினாா்.

இதேபோல, கம்புளியம்பட்டி கிராம ஊராட்சி, சரளை பகுதியில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டையும் சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.