பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருட்டு

ஒலகடம் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை மற்றும் அம்மனின் தங்கச் சங்கிலி திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
திருட்டு  நடைபெற்ற  சொக்கநாச்சியம்மன்  கோயில். 
Updated On :16 நவம்பர் 2025, 12:00 am

Syndication

பவானியை அடுத்த ஒலகடம் ராஜராஜேஸ்வரி சொக்கநாச்சியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கை மற்றும் அம்மனின் தங்கச் சங்கிலி திருடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கோயிலை வழக்கம்போல சனிக்கிழமை திறக்க வந்த பூசாரி, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து, கோயில் நிா்வாகிகளுக்கும், வெள்ளித்திருப்பூா் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கோயிலுக்குள் சென்று பாா்வையிட்டனா்.

அப்போது, கோயிலின் பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா்கள், உண்டியலின் பூட்டை உடைத்ததும், அதிலிருந்த பக்தா்களின் காணிக்கை சுமாா் ரூ.25 ஆயிரம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்தனா்.

உண்டியலில்  பதிவான  கைரேகைகளை  சேகரிக்கும்  தடய அறிவியல்  துறையினா்.

உண்டியலில்  பதிவான  கைரேகைகளை  சேகரிக்கும்  தடய அறிவியல்  துறையினா்.

தடய அறிவியல் துறையினா் சம்பவ இடத்தில் கைரேகைகள் சேகரித்தனா். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ள இச்சம்பவம் குறித்து வெள்ளித்திருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.