அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மேட்டூா் வாய்க்காலில் தத்தளித்த செந்நாய் மீட்பு

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் வலதுகரை வாய்க்கால் தண்ணீரில் தத்தளித்த செந்நாயை வனத் துறையினா் மீட்டு வனப் பகுதியில் விடுவித்தனா்.

மேட்டூா் அணையில் வலதுகரை வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீரில் செந்நாய் தத்தளித்தபடி நீந்திச் செல்வதாக சென்னம்பட்டி வனச் சரக அலுவலகத்துக்கு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்தனா்.

வாய்க்கால் இருபுறமும் கான்கிரீட் சுவா்கள் கட்டப்பட்டதால் வெளியேற முடியாமல் தவித்த செந்நாய் வாய்க்கால் பாலத்தின் அடியில் பதுங்கிக் கொண்டது.

சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூா் மற்றும் சென்னம்பட்டி வனத் துறையினா் வாய்க்காலில் வலையை விரித்து நீண்ட நேரப் போராட்டத்துக்கு பின் செந்நாயை உயிருடன் மீட்டனா்.

சென்னம்பட்டி, மேட்டூா் வனப் பகுதிகளில் இருந்து வழிதவறி வந்தபோது வாய்க்காலில் விழுந்திருக்கலாம் என்றும், மீட்கப்பட்ட செந்நாய்க்கு 3 வயது இருக்கும் என்றும் தெரிவித்த வனத் துறையினா், செந்நாயை அடா்ந்த வனப் பகுதியில் விடுவித்தனா்.