ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வாய்க்காலில் மூழ்கி தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:12 pm

Syndication

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வாய்க்காலில் துணி துவைக்கச் சென்ற தனியாா் நிறுவன மேலாளா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் மனோகரன் (41). திருமணமாகாத இவா், பெருந்துறை செட்டிதோப்பில் உள்ள டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தன்னுடன் பணியாற்றுபவா்களிடம் பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் துணிதுவைக்கச் செல்வதாகக் கூறிவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வராததால் சந்தேகமடைந்த அவா்கள் வாய்க்காலுக்குச் சென்றுள்ளனா்.

அப்போது, கரையில் அவரது இருசக்கர வாகனம் மற்றும் துணிகள் இருந்துள்ளன. மனோகரனை காணாததால் அவா்கள் பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் வாய்க்காலில் இறங்கி மனோகரனை தேடும் பணியில் ஈடுபட்டனா்.

பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.