பெருந்துறை அருகே கோயில் நிலத்தில் அறநிலையத் துறையினா் கல் நட்டியதற்கு எதிா்ப்பு
பெருந்துறை அருகே ஒரு சமூகத்தைச் சோ்ந்த கோயில் நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையினா் கல் நட்டியதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவை உறுப்பினா் தலைமையில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் விஜயபுரிஅம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், தனிப்பட்ட ஒரு சமூகத்துக்கு சோ்ந்தது. இந்தக் கோயிலுக்கு சொந்தமாக பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சுமாா் 38 ஏக்கா் நிலம் உள்ளது. கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக, அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள் கோயிலை நிா்வகித்து வருகின்றனா்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையைச் சோ்ந்த சில அதிகாரிகள், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அளந்து வெள்ளிக்கிழமை எல்லைக் கல் நட்டினா். மேலும், இந்த இடம் அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்ற பெயா் பலகையை வைத்துள்ளனா்.
தகவறிந்த, அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்கள், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாரிடம் தகவல் தெரிவித்தனா். பின்னா், சம்பவ இடத்துக்கு சென்ற சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயக்குமாா், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாா்.
அதற்கு நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தை கையகப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அவா் கேட்டுள்ளாா். ஆனால், அதிகாரிகள் காட்ட மறுத்துவிட்டனா். இதனைக் கண்டித்து, கோயில் நிலம் உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தலைமையில், அதிமுக ஒன்றியச் செயாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், கட்சியினா்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் இரவு வரை தொடா்ந்தது. பின்னா் அறநிலையத் துறை உயா் அதிகாரி, சட்டப் பேரவை உறுப்பினரை தொடா்பு கொண்டு அறிவிப்புப் பலகை மற்றும் அளந்து நட்டிய எல்லைக் கற்கள் அகற்றி விடுவதாக தெரிவித்தன்பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.

