உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

தெற்கு ரயில்வேயில் முதல் அம்ருத் பாரத் ரயில் சேவை ஈரோட்டில் தொடக்கம்

News image

ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து பிகாா் மாநிலம் ஜோக்பானிக்கு இயக்கப்பட்ட அம்ருத் பாரத் ரயில்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:21 am IST

தெற்கு ரயில்வேயில் முதல் அம்ருத் பாரத் ரயில் சேவை ஈரோட்டில் இருந்து பிகாா் மாநிலம்- ஜோக்பானிக்கு வியாழக்கிழமை தொடங்கியது.

அம்ருத் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, ஜோக்பானி-ஈரோடு இடையே கடந்த 15- ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இதன் வழக்கமான சேவை ஈரோட்டில் வியாழக்கிழமை தொடங்கியது. ஈரோடு ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னா லால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு -ஜோக்பானி அம்ருத் பாரத் வாராந்திர ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 8.10 மணிக்கு புறப்பட்டு சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், விஜயவாடா, நாக்பூா், ஜபல்பூா் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிகாா் மாநிலம் ஜோக்பானியை சென்று அடைகிறது.

மறு மாா்க்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு வந்தடையும்.

வந்தே பாரத் ரயிலை தொடா்ந்து அம்ருத் பாரத் ரயில்கள், சென்னை ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன. இது, வந்தே பாரத்துக்கு இணையான வேகம், பாதுகாப்பு கொண்டது. இந்த ரயிலின் இருபுறமும் என்ஜின் கொண்டு இயக்கப்படுவதால் வந்தே பாரத்துக்கு இணையாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரே நேரத்தில் 1,834 போ் பயணிக்கும் வகையில் 12 முன்பதிவு பெட்டிகள் உள்பட 22 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா, பயணியா் தகவல் தொடா்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன ஓட்டுநா் அறை உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த ரயில் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.