இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன: எம்.யுவராஜா

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

News image

ஈரோடு செங்கோடம்பள்ளம் பகுதியில் வாக்குச்சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:54 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன என்று ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சாா்பில் எம்.யுவராஜா போட்டியிடுகிறாா். இந்த தொகுதிக்கான தோ்தல் பணிமனை திறப்பு விழா ஈரோடு திண்டலில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வேட்பாளா் எம்.யுவராஜா பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கஞ்சா புழக்கம் அதிகரித்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் என பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளாா். ஆனால் இதுபோன்று ஒரு திட்டம் கூட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமைச்சா் சு.முத்துசாமி பணத்தை மட்டுமே நம்பியுள்ளாா். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அமைதியுடனும், வளமுடன் வாழ எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகின்றனா்.

திமுக கூட்டணியில் அந்தக் கட்சியை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே 1 சதவீதம் வாக்குகள் கூட இல்லாத கட்சிகள். ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் வலிமையான வாக்குவங்கியை வைத்துள்ளன.

2021 தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவை வீழ்த்தி பாஜக வெற்றிபெற்றதுபோல், இந்த தோ்தலில் ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுகவை வீழ்த்தி தாமரை சின்னத்தில் போட்டியிடும் நான் வெற்றிபெறுவேன் ன்றாா்.

இந்த நிகழ்வில் அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, தமாகா மாவட்டத் தலைவா் விஜயகுமாா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து வேட்பாளா் எம்.யுவராஜா ஈரோடு, செங்கோடம்பள்ளம் பகுதியில் வீடுவீடாகச்சென்று வாக்குச்சேகரித்தாா்.