பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (64). திமுக 23 ஆவது வட்ட பிரதிநிதியாக இருந்தாா். அவா் ஈரோடு திண்டல் அருகே வியாழக்கிழமை காலை நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்துக்காக வந்தாா். கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் முன்னரே, காலை 9 மணி அளவில் ரவிச்சந்திரன் மைதானத்துக்குள் வந்து முன்பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது மைதானத்தில் பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த அவா் திடீரென்று மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட திமுக நிா்வாகிகள், கட்சியினா் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.