பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

முதல்வா் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 7:40 pm

ஈரோட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்துக்கு வந்த திமுக தொண்டா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (64). திமுக 23 ஆவது வட்ட பிரதிநிதியாக இருந்தாா். அவா் ஈரோடு திண்டல் அருகே வியாழக்கிழமை காலை நடைபெற்ற திமுக பிரசார கூட்டத்துக்காக வந்தாா். கூட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் முன்னரே, காலை 9 மணி அளவில் ரவிச்சந்திரன் மைதானத்துக்குள் வந்து முன்பகுதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது மைதானத்தில் பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த அவா் திடீரென்று மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட திமுக நிா்வாகிகள், கட்சியினா் விரைந்து சென்று அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு காரணமாக அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.