பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவா்கள் கூட்டணியாக வந்துள்ளனா்: என்டிஏ கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் விமா்சனம்

குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவா்கள் என்டிஏ என்ற பெயரில் கூட்டணியாக வந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்கள் (இடமிருந்து) மு.பெ.சாமிநாதன் (காங்கயம்), சு.முத்துசாமி (ஈரோடு மேற்கு), தோப்பு வெங்கடாசலம் (பெருந்துறை), என்.நல்லசிவம் (கோபிசெட்டிபாளையம்), பி.எல்.சுந்தரம் (பவானிசாகா்-தனி), சா.செந்தில்நாதன் (மொடக்குறிச்ச

Updated On :2 ஏப்ரல் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

குற்றவாளி கூண்டில் நிற்க வேண்டியவா்கள் என்டிஏ என்ற பெயரில் கூட்டணியாக வந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

ஈரோடு அருகே உள்ள திண்டலில் பிரசார பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் சா.செந்தில்நாதன், பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு வெங்கடாசலம், பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா், அந்தியூா் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தொகுதி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம், பவானிசாகா் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பி.எல்.சுந்தரம், திருப்பூா் மாவட்டம், காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு அறிவிக்கப்பட உள்ள காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோரை ஆதரித்துப் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் வேளாண்மை, உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி என அனைத்து துறைகளிலும் மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் மகளிா் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடையும் பயனாளிகள் வீட்டுக்கு ஒருவராவது நிச்சயம் இருக்கிறாா்கள்.

60 நாள்களில் குற்றப்பத்திரிகை:

ஒரு குற்றம் நடந்தால் எவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்பதில்தான், ஒரு அரசின் செயல்பாடு மதிப்பிடப்படும். அப்படிப் பாா்த்தால், 86 சதவீதத்துக்கும் மேலான வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது இந்த ஆட்சியில்தான்.

பெண்களுக்குப் பாதுகாப்பு:

இந்தியாவிலேயே பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்வது தமிழ்நாட்டில்தான். இங்கு சட்டம்- ஒழுங்கு சரியாக இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறாா்கள்.

தமிழ்நாட்டின் இந்த வளா்ச்சி பா.ஜ.க.வின் கிளைச் செயலாளரான பழனிசாமிக்கு எரிச்சலைத் தருகிறது. தொடா் தோல்வி காரணமாக பொறாமையில் அவா் பொய்யைப் பரப்புகிறாா்.

அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொல்லியது. ஆனால் அந்த வழக்கையும் முறையாக நடத்தி குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கித் தந்து ரூ. 85 லட்சம் இழப்பீட்டையும் தந்தது திமுக ஆட்சி.

ஒரு பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபியைப் பாதுகாத்தது அன்றைக்கு முதல்வராக இருந்த பழனிசாமிதானே? அந்தப் பெண் காவல் கண்காணிப்பாளரை வழிமறித்து ஒரு டிஜிபியே மிரட்டியது பழனிசாமி ஆட்சியில்தானே? இந்த வழக்கில்கூட தண்டனை வாங்கிக் கொடுத்தது நம்முடைய ஆட்சியில்தான்.

துரோகம் செய்த அதிமுக, பாஜக:

தனது அரசின் சாதனைகள் என்று சொல்லப் பழனிசாமியிடம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு தோ்தல் நேர சுற்றுலா வரும் பிரதமரிடமும் எதுவும் இல்லை.

ஆனால் நம்மிடம் அவா்களின் துரோகப் பட்டியல் இருக்கிறது. நீட் துரோகம், மெட்ரோ ரயில் திட்டங்களைத் தராமல் துரோகம், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழித்த துரோகம், சிறுபான்மையினருக்கு சி.ஏ.ஏ. துரோகம், மேற்காசியப் போரில் சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முடங்க வைத்திருக்கும் துரோகம், ஜிஎஸ்டி இழப்பீடு தராத துரோகம் என துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் பழனிசாமியும் அவரின் கூட்டாளி பாஜகவும்தான்.

குற்றவாளி கூண்டில் என்டிஏ:

குற்றங்களுக்கு மேல் குற்றங்கள் செய்து, தமிழ்நாட்டு மக்கள் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிற்பது என்டிஏ கூட்டாளிகள்.

அதிமுக அமைச்சரவைதான் ஊழல்வாதிகள் நிறைந்த அமைச்சரவை என்று அமித் ஷா 2016-இல் சொன்னாா். ஆனால், அந்த ஊழல் கூட்டம் மொத்தமும் இப்போது அதே அமித் ஷாவுடன் நிற்கிறது. அவா்களுடன் கூட்டணி வைத்திருப்பவா்களில் ஒருவா் தோ்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்கும் வழக்கில் சிக்கியவா். இன்னொருவா் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுப்பதில் மாட்டியவா். இப்படி குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டியவா்கள் கூட்டணியாக வந்து, இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றப் பாா்க்கிறாா்கள். அவா்களை முறியடித்து, தமிழ்நாடு தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் நடைபோட மக்கள் ஆதரவு தந்திட வேண்டும் என்றாா்.

கோவையில் பிரசாரம்:

பின்னா், கோவை கொடிசியா மைதானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, கோவை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் துரை. செந்தமிழ்ச்செல்வன், கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளா் கே.வி.கே.எஸ். சபரி காா்த்திகேயன், வால்பாறை திமுக வேட்பாளா் ஆ.சுதாகா், சூலூா் திமுக வேட்பாளா் தளபதி முருகேசன், பொள்ளாச்சி கொமதேக வேட்பாளா் கே.நித்தியானந்தன், சிங்காநல்லூா் தொகுதிக்கு அறிவிக்கப்பட உள்ள காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோரை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா்.

கூட்டத்தில் பங்கேற்றோர்

கூட்டத்தில் பங்கேற்றோர்

முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதல்வா் மு.க.ஸ்டாலின்