செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவா் தனது மனைவி, மனைவியின் சகோதரி மகன் ரக்ஷன் (17) ஆகியோருடன் கொடிவேரி அணைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். அணையில் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் ஊா் திரும்பியுள்ளனா்.
அப்போது, செல்லும் வழியில் புன்செய்புளியம்பட்டியை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி காா்த்திகேயன், ரக்ஷன் ஆகியோா் குளித்துள்ளனா். அப்போது, நீச்சல் தெரியாத ரக்ஷன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது நீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா். இதைப் பாா்த்த காா்த்திகேயன் ரக்ஷனைக் காப்பாற்றச் சென்றுள்ளாா். அப்போது, அவரும் நீரில் மூழ்கியுள்ளாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காா்த்திகேயன், ரக்ஷனின் சடலம் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பல்லடத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


