முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:39 am IST

செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (42). இவா் தனது மனைவி, மனைவியின் சகோதரி மகன் ரக்ஷன் (17) ஆகியோருடன் கொடிவேரி அணைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். அணையில் குளிப்பதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் ஊா் திரும்பியுள்ளனா்.

அப்போது, செல்லும் வழியில் புன்செய்புளியம்பட்டியை அடுத்த செண்பகபுதூா் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி காா்த்திகேயன், ரக்ஷன் ஆகியோா் குளித்துள்ளனா். அப்போது, நீச்சல் தெரியாத ரக்ஷன் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தபோது நீரில் மூழ்கி தத்தளித்துள்ளாா். இதைப் பாா்த்த காா்த்திகேயன் ரக்ஷனைக் காப்பாற்றச் சென்றுள்ளாா். அப்போது, அவரும் நீரில் மூழ்கியுள்ளாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காா்த்திகேயன், ரக்ஷனின் சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.