சத்தியமங்கலம் தோ்தல் அலுவலகத்தில் யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை தொடங்கினாா்.
தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினா் பல்வேறு யுக்திகளை கையாண்டு பிரசாரம் செய்து வருகின்றனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி, தோ்தல் அலுவலக வரவேற்பு முகப்பில் மாவிலை தோரணம் கட்டி, குலை தள்ளிய வாழைமரம் வைத்து யாக குண்டம் அமைத்தாா்.
இதைத் தொடா்ந்து வேத விற்பனா்கள் வேத மந்திரம் முழங்க, கணபதி பூஜை நடைபெற்றது. பின்னா் அதிமுக நிா்வாகிகள் விநாயருக்கு கோயிலுக்கு ஊா்வலமாக சென்று கோயிலில் தோ்தல் துண்டுப் பிரசுரம் வைத்து பூஜை செய்தனா்.
இதைத் தொடா்ந்து, யாக சாலையில் நிா்வாகிகள் நின்று திருஷ்டி பூசணி உடைத்து பிரசாரத்தை தொடங்கினாா். பவானிசாகா் தொகுதியின் குரு மூளையான கள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பண்ணாரி வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

பவானிசாகரில் தவெக வேட்பாளா் வெற்றி

விறு, விறுப்பாக நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரம்

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு: அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் ஊா்வலம்

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



