தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலத்தில் சமரச மையம் மூலம் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சத்தியமங்கலத்தில்  வியாழக்கிழமை  நடைபெற்ற  சமரச மையம் குறித்த  விழிப்புணா்வுப் பேரணியில்  பங்கேற்றோா் .

Updated On :9 ஏப்ரல் 2026, 7:36 pm

சத்தியமங்கலத்தில் சமரச மையம் மூலம் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை சமரச மையம் மூலம் தீா்வு காண சாா்பு நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. சமரச மையத்தின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுச் செல்லவும் நீண்ட நாள் தீா்வு காணாத வழக்குகளை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் உள்ள சமரச மையம் மூலம் பதிவு செய்து தீா்வு காணவும் வழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் சாா்பு நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி கே.எஸ்.சபீனா தமைலையில் தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியானது சத்தி- மைசூரு சாலை வழியாக மீண்டும் சாா்பு நீதிமன்றத்தை சென்றடைந்தது. சமரச மையத்தில் ரசகியம் காக்கப்படும், கட்டணம் ஏதுமில்லை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.