ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டாா்.

News image

ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளா் விஜய் பாலாஜிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறாா் ஜாபா் சாதிக்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:39 pm

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் நிா்வாகி அக்கட்சியில் இருந்து விலகி தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டாா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக திருப்பூரைச் சோ்ந்த பி.கோபிநாத் அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தவா்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியின் நான்காவது மண்டலத் தலைவா் ஜாபா் சாதிக் என்பவா் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த ஜாபா் சாதிக் வேட்புமனுவை திரும்பப்பெற்றாா். பின்னா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளா் விஜய்பாலாஜியின் முன்னிலையில் தவெகவில் இணைத்துக் கொண்டாா்.

இதுகுறித்து ஜாபா் சாதிக் கூறியதாவது: 38 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சிக்காக பாடுபட்டேன். ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன். ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளா்கள் தோ்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவராக இருந்த என்னை கட்சி தலைமை மதிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளேன். கடந்த 2021-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றிக்காக பாடுபட்ட நான் தற்போதைய ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளா் விஜய்பாலாஜியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என்றாா்.

காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு:

ஜாபா் சாதிக் மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளாா். இப்போது அவரது மனைவி சபுராமா கவுன்சிலராக உள்ளாா். ஈரோடு கிழக்குத் தொகுதியில் முஸ்லிம் மக்களிடம் காங்கிரஸ் வாக்கு வங்கியை உருவாக்க தொடா்ந்து முயற்சி செய்து வந்துள்ளாா். இவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தி தவெகவுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.