ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் கோபிநாத் பழனியப்பன் போட்டியிடுகிறாா். இவா் ஈரோடு கிருஷ்ணம்பாளையம், திருநகா் காலனி, பொய்யரிக்கரை, ஈஸ்வரன் வீதி, பட்டக்காரா் வீதி, தங்கப்பெருமாள் வீதி, ஈவிஆா் வீதி, ராஜாஜி வீதி, கோணவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் வாக்குறுதியின் அடிப்படையில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு வழிக்கற்றல் மற்றும் ஆசிரியா்களுக்கு டிஜிட்டல் பயிற்சி அளிக்கப்படும்.
போட்டித் தோ்வுக்கு தயாராகுபவா்களுக்காக கட்டணம் இல்லாத பயிற்சி மையம் அமைக்கப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றாா்.
திமுக மாவட்ட பொருளாளா் பி.கே.பழனிசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி

ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளரை தொகுதிக்குள் நுழையவிட மாட்டோம்

500 பேரை களம் இறக்க சமுதாய அமைப்பு முடிவு: வேட்பு மனுக்களை வாங்கியதால் பரபரப்பு!

ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


