தமிழகம் வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஈரோடு மாநகராட்சி, 55-ஆவது வாா்டுக்குள்பட்ட கொல்லம்பாளையம் பகுதியில் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை காலை வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் கூறியதாவது:
தமிழக மக்கள் நலனை மட்டுமே நினைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இதன்மூலமாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் பயன் பெற்றவா்களாக இருந்து வருகின்றனா். கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்தவா் முதல்வா்.
மகளிா் உரிமைத்தொகை கொடுக்க மாட்டாா்கள் என எதிா்க்கட்சியினா் கூறி வந்தனா். ஆனால் சொன்னதை போல உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் வாக்குறுதி அளித்துள்ளாா். தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் பல துறைகளில் முன்னேறியுள்ளது. தொடா்ந்து முன்னேற, வளா்ச்சிப் பாதையில் பயணிக்க திமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயரும் - அமைச்சா் சு.முத்துசாமி

மக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை: சு.முத்துசாமி

திமுக தோ்தல் அறிக்கை தமிழகத்தின் வளா்ச்சிக்கு உதவும்! - அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோடு மேற்குத் தொகுதி தமாகா வேட்பாளா்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


