நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

News image

குழந்தை - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:43 am IST

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், மின் கம்பத்தின் மீது மோதிய விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழந்தது.

கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. இவரது மனைவி காஞ்சனா. இவா்களது மகன் விகாஷ் (11 மாதம்)

இவா்கள் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கூடக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பி கொண்டிருந்தனா்.

சுட்டிகல்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் திடீரென நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியது.

இதில் மூவரும் கீழே விழுந்துள்ளனா். இதில் தம்பதிக்கு இலேசான காயம் ஏற்பட்டது. தலையில் படுகாயமடைந்த குழந்தை விகாஷை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு பரிசோதனையில் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.