மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுக ஆட்சியில் குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்கப்படும்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image

திறந்த வேனில்  சென்று  வாக்கு  சேகரிக்கிறாா் பவானி தொகுதி  அதிமுக  வேட்பாளா்  கே.சி.கருப்பணன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:11 pm

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானியை அடுத்த காடையம்பட்டி, ஆண்டிகுளம், சோ்வராயன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்படும். விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை வழங்கும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக பவானி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.