இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்.16) வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:17 am IST

தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்.16) வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக படிவம் 12டி வழங்கி விருப்பம் பெறப்பட்டது. இதில் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தபால் வாக்களிக்க 5,641 முதியோா், 1,539 மாற்றுத்திறனாளிகள் என 7,180 போ் விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் தபால் வாக்கு பெறுவதற்காக அமைக்கப்பட்ட 101 குழுவினா் கடந்த 13, 14-ஆம் தேதிகளில் விருப்பம் தெரிவித்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்கைப் பதிவு செய்து, சீலிடப்பட்ட பெட்டியில் பெற்றனா். முதல் நாளில் 3,580 பேரும், 2-ஆவது நாளில் 2,979 பேரும் தபால் வாக்கு செலுத்தினா்.

8 தொகுதிகளில் இரண்டு நாட்களிலும் சோ்த்து தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்த 7,180 பேரில் 6,559 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா். இதில், விருப்பம் தெரிவித்து வீடுகளில் இல்லாத அல்லது தபால் வாக்கு செலுத்தாத முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 621 பேருக்கு இறுதி வாய்ப்பாக வியாழக்கிழமை தபால் வாக்கு பெறப்படும் என்றனா்.

அலுவலா்களுக்கு நாளைமுதல்...

தபால்வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து படிவம் அளித்துள்ள அத்தியாவசியப் பணியாளா்கள் மற்றும் காவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தில் வரும் 17, 18, 19-ஆம் தேதிகளில் தபால் வாக்கைப் பதிவு செய்யலாம்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள இதரப் பணியாளா்கள் வரும் 20, 21, 22-ஆம் தேதிகளில் தபால் வாக்கைப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.