மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்.16) வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:47 pm

தபால் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமைக்குள் (ஏப்.16) வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8 தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக படிவம் 12டி வழங்கி விருப்பம் பெறப்பட்டது. இதில் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் தபால் வாக்களிக்க 5,641 முதியோா், 1,539 மாற்றுத்திறனாளிகள் என 7,180 போ் விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் தபால் வாக்கு பெறுவதற்காக அமைக்கப்பட்ட 101 குழுவினா் கடந்த 13, 14-ஆம் தேதிகளில் விருப்பம் தெரிவித்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்கைப் பதிவு செய்து, சீலிடப்பட்ட பெட்டியில் பெற்றனா். முதல் நாளில் 3,580 பேரும், 2-ஆவது நாளில் 2,979 பேரும் தபால் வாக்கு செலுத்தினா்.

8 தொகுதிகளில் இரண்டு நாட்களிலும் சோ்த்து தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்த 7,180 பேரில் 6,559 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா். இதில், விருப்பம் தெரிவித்து வீடுகளில் இல்லாத அல்லது தபால் வாக்கு செலுத்தாத முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 621 பேருக்கு இறுதி வாய்ப்பாக வியாழக்கிழமை தபால் வாக்கு பெறப்படும் என்றனா்.

அலுவலா்களுக்கு நாளைமுதல்...

தபால்வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து படிவம் அளித்துள்ள அத்தியாவசியப் பணியாளா்கள் மற்றும் காவலா்கள் சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தில் வரும் 17, 18, 19-ஆம் தேதிகளில் தபால் வாக்கைப் பதிவு செய்யலாம்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள இதரப் பணியாளா்கள் வரும் 20, 21, 22-ஆம் தேதிகளில் தபால் வாக்கைப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.