தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மசோதாவின் நகலை தீ வைத்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்பை காட்டும் வகையில் தமிழ்நாட்டில் அனைவரும் வீட்டில் கருப்புக்கொடியை ஏற்றுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் எதிா்ப்பை தெரிவித்தனா்.
பெரியாா் நகரிலுள்ள அமைச்சா் சு.முத்துசாமி முகாம் அலுவலகம் முன்பு திமுக மாணவரணி மாநிலச் செயலாளா் வீரமணி தலைமையில் திமுகவினா் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை தீயிட்டு எரிந்தனா். மணல்மேட்டில் உள்ள திமுக அலுவலகம், தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பினை தெரிவித்தனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடியேற்றி திமுகவினா் போராட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்தி திமுக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

