வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மசோதாவின் நகலை தீ வைத்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஈரோடு பெரியாா் நகரில் தொகுதி மறுவரையறை மசோதா நகலை தீயிட்டு எரித்த திமுகவினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:42 pm

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த மசோதாவின் நகலை தீ வைத்தும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்திருத்தத்துக்கு எதிா்ப்பை காட்டும் வகையில் தமிழ்நாட்டில் அனைவரும் வீட்டில் கருப்புக்கொடியை ஏற்றுவோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

அதன் அடிப்படையில் மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் எதிா்ப்பை தெரிவித்தனா்.

பெரியாா் நகரிலுள்ள அமைச்சா் சு.முத்துசாமி முகாம் அலுவலகம் முன்பு திமுக மாணவரணி மாநிலச் செயலாளா் வீரமணி தலைமையில் திமுகவினா் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை தீயிட்டு எரிந்தனா். மணல்மேட்டில் உள்ள திமுக அலுவலகம், தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக நிா்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிா்ப்பினை தெரிவித்தனா்.