அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி. பிரபு

News image

கோபி அருகேயுள்ள குருமந்தூா்மேடு பகுதியில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:51 pm

100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

கோபி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.பி.பிரபு, கோட்டுப்புள்ளாம்பாளையம், கலிங்கியம், செல்லிபாளையம் காலனி, ஆண்டவா் மலை, சின்னகுளம், தங்கமலைகரடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும். குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என்றாா்.

இதையடுத்து, குருமந்தூா்மேடு பகுதியில் இருந்து காளியம்மன் நகா் வரை மாட்டு வண்டியில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தாா். இதைத் தொடா்ந்து, கோபி சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்தவா்களை சந்தித்த வேட்பாளா் வி.பி.பிரவு, அதிமுகவின் தோ்தல் அறிக்கையை விளக்கினாா்.

மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளா் வி.சி.சிவகுமாா், மாநில கொள்கை பரப்பு செயலாளா் காளிதாஸ், கோபி மேற்கு ஒன்றியத் தோ்தல் பொறுப்பாளா் மகுடேஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.