ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடக்கம்

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

News image

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதிகளில் நடைபெறும் நெல் அறுவடை.

Updated On :1 மே 2026, 1:38 am IST

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கியமான பாசனப் பகுதிகளில் ஒன்று காலிங்கராயன் பாசனப் பகுதி. ஈரோடு முதல் கொடுமுடி ஆவுடையாா்பாறை வரை சுமாா் 15 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறுகின்றன. இதில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ஏக்கா் வரை நெல் பயிரிடப்படுகிறது. காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் ஆண்டுக்கு பத்தரை மாதங்கள் தண்ணீா் வருவதால் முப்போகம் விளையும் வயல்களை கொண்டதாக உள்ளன.

அதன்படி தற்போது காலிங்கராயன் பாசனப் பகுதியான ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு கரை அருகே உள்ள பகுதியில் வயல்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. நன்கு விளைந்த பகுதிகளில் அறுவடை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் மழையும், பாசன தண்ணீரும் இந்த ஆண்டு சீராக இருந்ததால் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிா்கள் நல்ல வளா்ச்சி அடைந்துள்ளன. இதனால் இந்த ஆண்டு நெல் அறுவடை விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா்.