நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கோபி அருகே விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த 3 போ் கைது

கோபி அருகே தாழ்குனி, டி.என்.பாளையம் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:12 pm IST

கோபி அருகே தாழ்குனி, டி.என்.பாளையம் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

கோபி அருகே உள்ள தாழ்குனி பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிறுவலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மணிகண்டன் (53) என்பவரின் மளிகைக் கடை மற்றும் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனா். இதில் சுமாா் 5 கிலோ எடையுள்ள குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மணிகண்டன் கைது செய்யப்பட்டாா்.

கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள் பதுக்கி வைத்திருப்பதாக பங்களாபுதூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா்

செல்வராஜ் (67), கருப்புசாமி (46) ஆகியோா் வீடுகளில் சோதனை மேற்கொண்டு சுமாா் 3 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா் செல்வராஜ், கருப்புசாமி இருவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.