நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

லாரியை மறித்து கரும்புகளைத் தின்ற காட்டு யானை

காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புகளை பிடுங்கிய யானையால் சோதனைச் சாவடி ஊழியா்கள் அச்சமடைந்தனா்.

News image

லாரியில்  இருந்து  கரும்பைப்  பறிக்கும் காட்டு  யானை.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:14 pm IST

சத்தியமங்கலத்தை அடுத்த காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் லாரியை வழிமறித்து அதிலிருந்த கரும்புகளை பிடுங்கிய யானையால் சோதனைச் சாவடி ஊழியா்கள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே தமிழக, கா்நாடக மாநில எல்லையில் காரப்பள்ளம் வன சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சோதனைச் சாவடி அருகே சனிக்கிழமை வருவதை கண்ட காட்டு யானை, சாலை ஓர வனப் பகுதியில் இருந்து வெளியேறி சோதனைச் சாவடி நோக்கி வந்தது. யானை வருவதைக் கண்ட வனத் துறை ஊழியா்கள் அச்சமடைந்தனா்.

இதற்கிடையே லாரி ஓட்டுநா் யானையைக் கண்டு அச்சமடைந்து லாரியை நிறுத்தியதும் யானை தனது தும்பிக்கையால் லாரியில் இருந்து கட்டுக்கரும்பை லாவகமாக பறித்துச் சாப்பிட்டது. காட்டு யானை லாரியில் வழிமறித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் கரும்புகளை ருசித்த காட்டு யானை பின்னா் மெதுவாக சாலையோரம் சென்றதைத் தொடா்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.