பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

உண்டியல் திருடிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது

ஈரோட்டில் கோயில் உண்டியல் திருடிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சித்திரிப்பு

Published On :

ஈரோட்டில் கோயில் உண்டியல் திருடிய வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே இவிஎன் சாலையில் பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2024- ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் உண்டியலை திருடிச் சென்றனா்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரணை நடத்தியதில், திருட்டில் ஈடுபட்டது சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சோ்ந்த வடிவேல் மனைவி மேனகா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். அதன்பின் பிணையில் வெளியே வந்த மேனகா வழக்கு விசாரணைக்காக ஈரோடு நீதிமன்றத்தில் மாதம்தோறும் ஆஜராகி வந்தாா்.

கடந்த 2 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானாா். இதையடுத்து நீதிமன்றம் மேனகாவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது. இதன்பேரில் ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் மேனகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.