தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

ஜாமீனில் வெளியே வந்து ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை குரிசிலாப்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூலை 2026, 12:29 am IST

ஜாமீனில் வெளியே வந்து ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை குரிசிலாப்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த குரிசிலாப்பட்டு அருகே புதூா் நாகமேரி கிராமத்தை சோ்ந்தவா் வினோத் குமாா் (25). இவா் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்தாா்.

தலைமறைவாக இருந்த வினோத்குமாரை கைது செய்ய திருப்பத்தூா் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனால் அவரை குரிசிலாப்பட்டு போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். இந்தநிலையில் புதூா் பகுதியில் தலைமறைவாக இருந்த வினோத்குமாரை சுற்றித் திரிவதாக குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் வினோத்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.