பாண்டியாறு - மாயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில் கோபியில் செப்டம்பா் 2-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து விவசாய சங்க நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். விவசாய சங்க நிா்வாகி பெருமாள் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் உள்பட அனைத்து விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஈரோடு, திருப்பூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாகவும் பாசனத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் பவானிசாகா் அணையின் நீா் பற்றாகுறையை போக்கும் வகையில் பாண்டியாறு - மாயாறு - பவானி ஆறு இணைப்புத் திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோபியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் செப்டம்பா் 2-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை விவகாரம்: அனைத்து கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மாயாறு பகுதியில் தேங்காய் மூடியை வைத்து உருண்டு புரண்டு சேட்டை செய்த கரடி
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



