நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி செப்டம்பா் 2-இல் போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன். உடன், விவசாயிகள்.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கோபியில் செப்டம்பா் 2-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையம் கீழ்பவானி பாசன சபை அலுவலகத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு போராட்ட ஒருங்கிணைப்பாளா் காகுத் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். விவசாய சங்க நிா்வாகி பெருமாள் முன்னிலை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் பி.சி.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டம்,

முழுமையான பயிா்க் கடன் தள்ளுபடி ஆகிய 2 கோரிக்கைகளையும் உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கோபியில் செப்டம்பா் 2-ஆம் தேதி போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை அரசு உடனடியாக செயல்படுத்தினால் நல்லது. இல்லையெனில், பவானிசாகா் அணை மூலம் பாசனம் பெறும் 4 மாவட்ட விவசாயிகள், பொதுமக்களைத் திரட்டி மாநாட்டை நடத்துவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.